தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி: 50க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி: 50க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி:  50க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்

நாமக்கல் அருகே தீபாவளி சிறுசேமிப்பு சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரி 50க்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

நாமக்கல்லை அடுத்த போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் தீபாவளி சிறுசேமிப்பு சீட்டு நடத்தி வந்தார். இதில், வாரந்தோறும் 100 ரூபாய் செலுத்தி 52 வாரங்கள் முடிவில் முதிர்வு தொகை வழங்குவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்துள்ளார்.

இதில், பலர் வாரம் 100 முதல் 1000 ஆயிரம் ரூபாய் வரை பல லட்சம் ரூபாய்க்கு சீட்டு போட்டு வந்த நிலையில், துரைசாமி தீபாவளியின் போது முதிர்வு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனையடுத்து அதில் பணம் போட்டவர்கள் தங்களுக்கு சீட்டு பணத்தை வழங்க வேண்டுமென கேட்டுள்ளனர்.

இந்நிலையில் துரைசாமி கடந்த மாதம் திடீரென வீட்டை காலி செய்து விட்டு வெளியூர் சென்றதாக தெரிகிறது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று நாமக்கல் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், தங்களிடம் சீட்டு பணம் வசூல் செய்து விட்டு முதிர்வு தொகையை வழங்காமல் தங்களை ஏமாற்றிய துரைசாமியிடமிருந்து தங்களது பணத்தை வசூல் செய்வதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com