40 ஆயிரம் முகாம்கள் - இலக்கான 20 லட்சம் பேரை தாண்டி தடுப்பூசி செலுத்தும் தமிழ்நாடு

40 ஆயிரம் முகாம்கள் - இலக்கான 20 லட்சம் பேரை தாண்டி தடுப்பூசி செலுத்தும் தமிழ்நாடு

40 ஆயிரம் முகாம்கள் - இலக்கான 20 லட்சம் பேரை தாண்டி தடுப்பூசி செலுத்தும் தமிழ்நாடு
Published on

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை வரை 20லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மெகா தடுப்பூசி முகாமிற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம், மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் போலியோ சொட்டு மருந்து இடங்கள் என பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை சுமார் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு, இந்த மெகா முகாமை தமிழக அரசு நடத்துகிறது.

சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 முகாம்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும், இரண்டு நடமாடும் தடுப்பூசி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி முகாமிற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com