ஆட்டோவில் தவறவிட்ட ரூ.90 ஆயிரம்: 3 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த காவல் துறையினர்

ஆட்டோவில் தவறவிட்ட ரூ.90 ஆயிரம்: 3 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த காவல் துறையினர்
ஆட்டோவில் தவறவிட்ட ரூ.90 ஆயிரம்: 3 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த காவல் துறையினர்

சென்னையில் ஆட்டோவில் தவறவிட்ட 90 ஆயிரம் ரூபாய் பணத்தை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் 3 மணி நேரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.

மணலியில் வசித்து வரும் டெல்லியைச் சேர்ந்த முகமது வசீம் தனது தாயாரை ஆட்டோவில் அழைத்துச்சென்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஆட்டோவில் தலையணையுடன் 90 ஆயிரம் ரூபாயை தவறவிட்டுள்ளார். பின்னர் இது தொடர்பான புகாரில், ஆட்டோ ஓட்டுனர் முருகனிடம் விசாரித்தப்போது, குப்பை என நினைத்து குப்பைத் தொட்டியில் வீசியதாக கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து குப்பைத்தொட்டியில் இருந்த பணத்தை கைப்பற்றி முகமது வசீமிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com