சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை செலுத்தினார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பலரும் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தன்னுடைய வாக்கை செலுத்தினார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய வாக்கை செலுத்த மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷராவுடன் ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு வந்து தன்னுடைய வாக்கை செலுத்தினார். கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.