சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா உறுதி !

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா உறுதி !
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா உறுதி !


சென்னை மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் 42 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலை மாணவர்கள் 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாகச் சென்னையில் நேற்றைய நிலவரப்படி 27,398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சென்னையில் தொடர்ச்சியாக ஆயிரம் பேருக்கு மேல் நாள்தோறும் கொரோனா தொற்று உறுதியாகி வருகின்றது. இந்நிலையில் விடுதியில் தங்கிப் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com