பேரவைக்குள் செல்போனில் பேச்சு - மீண்டும் சர்ச்சையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா

பேரவைக்குள் செல்போனில் பேச்சு - மீண்டும் சர்ச்சையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா
பேரவைக்குள் செல்போனில் பேச்சு - மீண்டும் சர்ச்சையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா

சட்டப்பேரவை அரங்கத்திற்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதியை மீறி, மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா செல்போன் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், சட்டப்பேரவைக்கு உள்ளே செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பதால், அரங்கத்திற்கு வெளியே உள்ள லாக்கரில் செல்போனை வைத்துவிட்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்வின்போது, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, விதிமுறைகளை மீறி சட்டப்பேரவை அரங்கில் செல்போனில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2011ஆம் ஆண்டு, பேரவை நிகழ்வின்போது செல்போனில் வீடியோ எடுத்ததால், டி.ஆர்.பி.ராஜாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com