எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றும் சிட்டுக்குருவிகள் அல்ல: தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ

எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றும் சிட்டுக்குருவிகள் அல்ல: தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ
எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றும் சிட்டுக்குருவிகள் அல்ல: தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ

அடைத்து வைப்பதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றும் சிட்டுக்குருவிகள் அல்ல என பெரம்பலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சிறைப்பிடித்து வைத்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது குறித்து பெரம்பலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தமிழ்செல்வன் கூறுகையில், அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும்தான் உள்ளனர். சுய விருப்பத்தின் பேரிலே அவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறைப் பிடித்து வைக்க அவர்கள் ஒன்றும் சிட்டுக்குருவிகள் அல்ல எனவும் அவர் கூறினார். எம்எல்ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக திமுக விஷம பரப்புரை செய்கிறது என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com