“மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்கட்சியினர் இணைகிறார்கள்” - மு.க.ஸ்டாலின்

“மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்கட்சியினர் இணைகிறார்கள்” - மு.க.ஸ்டாலின்

“மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்கட்சியினர் இணைகிறார்கள்” - மு.க.ஸ்டாலின்
Published on

மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்கட்சியினரும் திமுகவில் இணைவதில் ஆர்வம் காட்டுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், கருணாநிதி சிலை திறப்பு விழா தினத்தில் கட்சி அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்து, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை கருணாநிதி கட்டிகாத்த மதசார்பற்ற முற்போக்கு சமூகநீதி, ஜனநாயகக் கொள்கைகளின் முழக்கமாக அமையும் என கூறியுள்ளார். 

அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவிற்கான வெற்றிப் பாதையை சுட்டிக்காட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வெற்றியை திமுகவைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மக்களின் மனநிலை அறிந்து மாற்றுக் கட்சியினரும் அதை உணரத் தொடங்கியிருப்பதால்தான், திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் ஸ்டாலின் தமது மடலில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com