மக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்

மக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்

மக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்
Published on

மக்கள் நலனுக்காக சிறை சென்றேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தருமபுரியில் திமுக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அதில்,''தியாகம், சிறை, சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் என்னைப் பற்றி பேசக்கூடாது. நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை; மக்கள் நலனுக்காக சிறை சென்றேன். காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் திமுகவை விமர்சிக்கிறார்கள்.

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சி; மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை'' என்று தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com