நந்தினி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி திமுக போராட்டம் அறிவிப்பு

நந்தினி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி திமுக போராட்டம் அறிவிப்பு

நந்தினி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி திமுக போராட்டம் அறிவிப்பு
Published on

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் சிறுமி நந்தினியின் பாலியல் படுகொலை விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி, திமுக சார்பில் வருகிற 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 14 ஆம் தேதியன்று கீழமாளிகை கிராமத்தில் கிணற்றில் இருந்து நந்தினி சடலமாக மீட்கப்பட்டதாக கூறியுள்ளார். விசாரணையில் சிறுகடம்பூர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். நந்தினி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தி, திமுக சார்பில் அரியலூரில் வருகிற 10 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் நந்தினியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின், கட்சியின் சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com