5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
Published on

சென்னை வியாசர்பாடியில் ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்த மருத்துவர் திருவேங்கடம் இன்று காலமானார்.  அவரது மறைவு வட சென்னை  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருவேங்கடம் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

''வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி, தன் வாழ்நாளில் அதிகபட்சமாக 5 ரூபாய் மட்டுமே சிகிச்சைக் கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம் அவர்கள்!

எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com