பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
Published on

மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயகரமான சூழலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி‌ல், கடந்த 3 ஆண்டுகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016- 17 ஆம் ஆண்டில் 8 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல், 2017-18 ஆம் ஆண்டில் 16 சதவிகிதமாக அதிகரித்திருப்பது மத்திய மனிதவள அமைச்சர் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதேநேரம் தமிழக அரசு சட்டமன்றத்தில் வைத்த கொள்கை விளக்கக் குறிப்புகளில், இடைநிற்றல் 2016-17-ஆம் ஆண்டில் 3.75 சதவிகிதம் எனவும், 2017-18 இல் 3.61 சதவிகிதம் என தவறான தகவல் இடம்பெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஒரு மாணவர்கூட பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயகரமான சூழல் இனி எழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com