‘விழிப்புடன் கண்காணியுங்கள்; தேர்தல் பணி தொடரவே செய்கிறது”- மு.க.ஸ்டாலின்

‘விழிப்புடன் கண்காணியுங்கள்; தேர்தல் பணி தொடரவே செய்கிறது”- மு.க.ஸ்டாலின்
‘விழிப்புடன் கண்காணியுங்கள்; தேர்தல் பணி தொடரவே செய்கிறது”- மு.க.ஸ்டாலின்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்ட பிறகு அவற்றை காவல்துறையும் தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என இருந்துவிடக்கூடாது எனக் கூறியுள்ளார்.

பாதுகாப்பு மையங்களில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் 24 மணிநேரமும் இரவு பகல் பாராமல் கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார். அந்த வகையில் தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com