உசிலம்பட்டி அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டியைச் சேர்ந்த சிங்கம் என்பவரது மகன் விஜயகுமார் (24). இவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளோரிடம் கோபித்துக் கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனிடையே போத்தம்பட்டி அருகே அல்லிக்கொடி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற உசிலம்பட்டி தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணமால் போன விஜயகுமார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.