பட்டுப்புடவை வாங்கச் சென்ற போது சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப பலி

பட்டுப்புடவை வாங்கச் சென்ற போது சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப பலி
பட்டுப்புடவை வாங்கச் சென்ற போது சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப பலி

காஞ்சிபுரம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்‌.

பெங்களூருலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், காஞ்சிபுரத்திற்கு சென்று பட்டுப்புடவை வாங்கலாம் என முடிவெடுத்து காரில் கிளம்பியிருக்கின்றனர். கார் வேலூர் மாவட்டம் களத்தூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை அதன் ஓட்டுநர் வளைத்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பையும் தாண்டி எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. 

இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் படுகாயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டுப்புடவை வாங்க கிளம்பி, குடும்பமே விபத்தில் சிக்கிய சம்பவம் காண்போர் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com