சிறுவனுடன் தகாத உறவு: இளைஞருக்கு 5 வருடம் கடுங்காவல் தண்டனை!

சிறுவனுடன் தகாத உறவு: இளைஞருக்கு 5 வருடம் கடுங்காவல் தண்டனை!
சிறுவனுடன் தகாத உறவு: இளைஞருக்கு 5 வருடம் கடுங்காவல் தண்டனை!

சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞருக்கு 5 வருட கடுங்காவல் தண்டனை கொடுத்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சந்தையடியை சேர்ந்தவர் ஜெப செல்வின் (27). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் தனது வீட்டின் அருகிலுள்ள ஏழு வயது சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.  

இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஜெப செல்வின் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) நம்பி, ஜெப செல்வினுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com