”நீதிபதி சரியான முடிவெடுத்துள்ளார்”-திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து முன்னாள்அமைச்சர் செம்மலை

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி சரியான முடிவெடுத்துள்ளார்” என முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்தது. அதன்படி, ”இவ்வழக்கிலிருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை படித்தபின் 3 நாட்களாக தூங்கவில்லை” என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செம்மலை, “உயர்நீதிமன்ற நீதிபதி சரியான முடிவெடுத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com