மதுரையில் இருந்து நத்தம் வரை 44 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் வரை 7.3 கிலோ மீட்டா் தூரம் ரூ.670 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பறக்கும் பாலத்திற்காக அமைக்கப்படும் தூண்களுக்கு இடையே, பாலத்தின் மேல் பகுதி, இணைக்கப்பட்டு வருகின்றன.