“பாஜக-வின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது: வழக்கை சட்டப்படி சந்திப்போம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம் மற்றும் அவரது சட்டமன்ற அலுவலம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். பின் நள்ளிரவு 2 - 3 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்ப்பதற்காக அதிகாலையிலேயே மருத்துவமனை சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடமும் பேசினார். அவர் பேசியபோது, “பாஜகவின மிரட்டலுக்கெல்லாம் திமுக அஞ்சாது. நாங்க மிசாவையே பார்த்தவங்க. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்” என்றார். அவரது பேட்டியை, காணொளி வடிவில் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com