“பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல” - அமைச்சர்கள் கருத்து

“பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல” - அமைச்சர்கள் கருத்து

“பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல” - அமைச்சர்கள் கருத்து
Published on

பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் அடுத்த மாநில தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் பா.ஜ.க காலம் துவங்கி விட்டது, இதற்கு உதாரணம் தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள்.
தமிழக மக்கள் பா.ஜ.கவிற்கு கொடுத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம்.

கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தாலும், அதன் செல்வாக்கை காட்டி இருக்க முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. என்னைப் பொருத்தவரை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என்பதே,ஆனாலும் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்டோம்” என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல எனத் தெரிவித்தார். இதேபோல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது கருத்து. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால்தான் பலம் தெரியும். அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டாலும் அதிமுகவை வெல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com