“ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர்” - அமைச்சர் வேலுமணி

“ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர்” - அமைச்சர் வேலுமணி

“ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர்” - அமைச்சர் வேலுமணி
Published on

சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டுவ‌ரும் திட்டம் குறித்து ஏற்பாடுகள் செய்து வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

சென்னை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் விவசாயக் கிணற்றில் இருந்து தண்ணீர் பெறும் பணியை நேரில் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். 

அத்துடன், “சென்னை புறநகர் பகுதிகளில் 200 விவசாயக் கிணறுகள் வாடகைக்கு வாங்கப்பட்டு, நாளொன்று 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்ட சென்னைக்கு வழங்கப்படுகிறது. மேலும் குடிநீர் வாரியம் மூலம் அமைக்கப்பட்ட 13 ராட்சத குழாய்கள் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. அதன்மூலம் 15 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்படுகிறது.

சென்னைக்கு இதுபோன்று தண்ணீர் பற்றாக்குறை நிலை அடிக்கடி வரும். தற்போது இந்தச் சூழல் இருக்கிறது. இதைவிடவும் தண்ணீர் கீழே சென்றால்தான் நெருக்கடியான நிலை ஏற்படும். அதற்கும் மாற்றுவழி செய்து வைத்திருக்கிறோம். ரயில் மூலம் தண்ணீரை கொண்டு வருவதற்கு முதலமைச்சரிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com