அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை: காவல் ஆணையரிடம் புகார்

அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை: காவல் ஆணையரிடம் புகார்
அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை: காவல் ஆணையரிடம் புகார்

அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த் செந்தில் முருகன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், அமைச்சர் செல்லூர் ராஜுவை சந்தித்து மனு அளிக்க சென்றபோது அவரை காணவில்லை எனக் கூறியுள்ளார். எனவே அமைச்சரை மீட்டுதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர், வரும் 13ஆம் தேதிக்குள் எம்எல்ஏவை மீட்காவிட்டால் தர்ணா போரட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதே போல் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதாவை மீட்கக் கோரி அவரது உறவினர் பீரித்தா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எம்.எல்.ஏக்களின் நிலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் அளிக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com