”இதுவரை 3700 கோடி அளவிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது” - அமைச்சர் சேகர் பாபு

”இதுவரை 3700 கோடி அளவிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது” - அமைச்சர் சேகர் பாபு
”இதுவரை 3700 கோடி அளவிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது” - அமைச்சர் சேகர் பாபு

தமிழகம் முழுவதும் 3700 கோடி அளவிலான கோவில் சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது என்றும் பழமை வாய்ந்த நூறு சிறு கோவில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் அம்மன் சன்னதி மேற்கு பிரகாரம் கட்டுமான பணி தெப்பக் குளம் புனரமைக்கும் பணிகள் மற்றும் கோவிலின் மேல் தளத்தில் ஓடுகள் அமைக்கும் பணிகள் என மொத்தம் சுமார் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய திட்ட பணிகளுக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். டிவிஎஸ் நிறுவனத்தின் பங்களிப்போடு இந்த பணிகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’இன்று அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளை ஓராண்டிற்குள் முடித்து தருவதாக டிவிஎஸ் குழுமம் உறுதி அளித்துள்ளது. இந்த மொத்த செலவையும் டிவிஎஸ் நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது.

அதேபோல் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கோரிக்கையை ஏற்று இங்கு பக்தர்களின் காலனி பாதுகாப்பகம் மற்றும் பொருள்கள் பாதுகாப்பு அறைகள் 62 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் நெல்லையப்பர் கோயில் தேருக்கு கண்ணாடி அமைக்க மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்பட்டு அடுத்த மானிய கோரிக்கையில் அந்த அறிவிப்பு வெளியிடப்படும்.

கடந்த ஆண்டு அறிவித்ததில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் ஒன்பது கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 30 கோயில்கள் 32 கோடி ரூபாயில் குடமுழுக்கு செய்யப்படும் என அறிவித்திருந்தோம். இதில் மூன்று கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது ஏற்கனவே அறிவித்ததையும் சேர்த்து மீதமுள்ள 32 கோவில்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் குடமுழுக்கு நடத்தப்படும்.  

குறிப்பாக கோயிலின் திருத்தேர் செய்ய 34 லட்ச ம்ரூபாய் நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டுள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 1500 கோயில்கள் சுமார் ஆயிரம் கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கோவில்களுக்கு திருப்பணி செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 கோடி ரூபாய்க்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 40 கோடிக்கு ஒரு மாதத்திற்குள் அரசாணை வெளியிடப்படும் கன்னியாகுமரியில் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த நூறு சிறு கோவில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நகரங்களில் உள்ள 200 சிறு கோயில்களை புனரமைக்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு கோவில்களில் குடமுழுக்கு மற்றும் திருத்தேர் பணிகள் நடைபெற்று வருகிறது நெல்லையப்பர் கோவிலில் கழிவறை அமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும்.

ஆலயத்திற்கு வெளியே கோயில் நிலத்தில் தான் கழிவறை கட்ட முடியும். விரைவில் கழிவறை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் பதினொன்று திருமேனி( கோயில் சிலை) பாதுகாப்பு மையங்கள் முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டதால் பாதுகாப்பிற்கு காவலர்களை நியமித்து திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அந்த சிக்கல் சரிசெய்யப்பட்டு பதினொன்று திருமேனி பாதுகாப்பு மையங்களையும் காவல் காக்க காவலர்கள் நியமிப்பதற்கான கட்டணத்தை இந்து சமய அறநிலைத்துறையே ஏற்று ஒரு மாதத்திற்குள் பதினொன்று திருமேனி பாதுகாப்பு அறைகள் பயன்பாட்டிற்கு வரும் மேலும் கோயில் வாகனங்கள் பழுது பார்க்க மற்றும் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3700 கோடி அளவில் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடங்களை வாடகைக்கு விடும் பணிகளும் நடந்து வருகிறது. ஏற்கனவே நிலுவையில் இருந்த வாடகை வசூல் செய்யும் பணிகளும் நடைபெறுகிறது. மேலும் பயன்பாட்டில் இல்லாத இடங்களை கண்டறிந்து அவற்றையும் வாடகைக்கு விட்டு வருமானத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் . மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை கும்பாபிஷேகம் நடத்த அவர்கள் அனுமதி அளித்தால் உடனே கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலைத்துறை தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com