பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் - அமைச்சர் மூர்த்தி உறுதி

பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் - அமைச்சர் மூர்த்தி உறுதி

பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் - அமைச்சர் மூர்த்தி உறுதி
Published on

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடக்கும் என அமைச்சர் மூர்த்தி உறுதி செய்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துவந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி உறுதி செய்திருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும், ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் இன்று வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அறிவிப்பு வெளியானபிறகு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தமிழகமெங்கும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், அதேசமயம் கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com