\
ஒரு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி கேட்டு மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

ஒரு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி கேட்டு மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

ஒரு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி கேட்டு மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
Published on

ஒரு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் செப்டம்பர் 12ம் தேதி சிறப்பு முகாமை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவையாக உள்ளது. இந்நிலையில், சிறப்பு முகாம் நடத்த இருப்பதால் கூடுதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசி தேவை என்று கூறி, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

செப்டம்பர் 12ம் தேதி 10ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com