'வெற்றிலையை மறந்து இளைஞர்கள் "ஸ்வீட் பீடா"வுக்கு மாறிவிட்டனர்' - அமைச்சர் பன்னீர்செல்வம்

'வெற்றிலையை மறந்து இளைஞர்கள் "ஸ்வீட் பீடா"வுக்கு மாறிவிட்டனர்' - அமைச்சர் பன்னீர்செல்வம்
'வெற்றிலையை மறந்து இளைஞர்கள் "ஸ்வீட் பீடா"வுக்கு மாறிவிட்டனர்' - அமைச்சர் பன்னீர்செல்வம்

வெற்றிலை போடும் பழக்கம் குறைந்து, ‘ஸ்வீட் பீடா’ சாப்பிடுவதை இளைஞர்கள் அதிகம் விரும்புவதாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்வரை தலைவாழையில் சாப்பாடு, கடைசியில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருந்தது. உணவே மருந்து என்ற பேச்சுக்கு இணங்க செரிமானத்திற்காக இந்தப் பழக்கம் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் பழக்கம் முற்றிலும் அடியோடு மாறியுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய பெரியகுளம் எம்எல்ஏ சரவணன், வெற்றிலையை மருத்துவத்துறை பயன்படுத்தும் விதமாக, வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

காட்டுமன்னார்கோவிலில் வெற்றிலை அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் லால்பேட்டையில் ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தோட்டக்கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் கல்லூரிகள் மூலம் வெற்றிலை ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். கடந்த காலங்களில் உணவு சாப்பிட்ட உடன் வெற்றிலை போடும் பழக்கம் இருந்ததாகவும், ஆனால், தற்போது இளைஞர்கள் ஸ்வீட் பீடாவுக்கு மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com