முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது

முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது

முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது
Published on

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் லியாகத் அலி. இவரது வங்கி கணக்கில் ரூ.8 கோடி பணம் இருந்ததை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடந்த மார்ச் மாதம் இது தொடர்பாக லியாகத் அலியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் போலியாக பல்வேறு நிறுவனங்களை தொடங்கி முறைகேடாக, ரூ.80 கோடிக்கு ஹவாலா பணத்தை ஹாங்காங்கிற்கு அனுப்பி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவர் கைதானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com