\
“துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்திருப்பதை பாராட்டுகிறோம்” அமைச்சர் கே.சி.வீரமணி

“துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்திருப்பதை பாராட்டுகிறோம்” அமைச்சர் கே.சி.வீரமணி

“துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்திருப்பதை பாராட்டுகிறோம்” அமைச்சர் கே.சி.வீரமணி
Published on

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டுகள் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலுவும், துணைப்பொதுச்செயலாளராக ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டுகள் என அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார். மேலும், “தமிழகத்தில் மிட்டா மிரசுகள் தான் நாட்டை ஆள முடியும் என்ற காங்கிரஸாரின் கொள்கையை முறியடித்த திராவிட இயக்கம் இது. தமிழகத்தை திராவிட கட்சிகள் தான் வழிநடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது திராவிட இயக்கம். இப்படியான இயக்கத்திற்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்திருப்பதை பாராட்டுகிறோம்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com