கருணாஸூக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

கருணாஸூக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

கருணாஸூக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!
Published on

கருணாஸ் எம்.எல்.ஏவின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி. அவருக்கு நாக்கில் சனி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒரு சமூகத்தை இழிவு படுத்தி பேசுவதை ஏற்க முடியாது. அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக் காதது ஏன்? அவர் ஏன் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்?

திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது. ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதைக் கண்டிக்காதது ஏன்? ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான், திறக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com