தமிழ்நாடு
லிஃப்ட்டில் சிக்கிய அமைச்சர் - கதவை உடைத்து மீட்கப்பட்டார்
லிஃப்ட்டில் சிக்கிய அமைச்சர் - கதவை உடைத்து மீட்கப்பட்டார்
நாகையில் மீனவர்கள் இடையே நடந்த மோதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மருத்துவமனை சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன் லிஃப்ட்டில் சிக்கிக்கொண்டார்.
நாகையில் இரு மீனவ கிராமங்களுக்கிடையே நிகழ்ந்த மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்திப்பதற்காக தரைத்தளத்திலிருந்து மேல்தளத்திற்கு லிஃப்ட் மூலம் ஓ.எஸ்.மணியன் சென்றார். அப்போது இரண்டு தளங்களுக்கு இடையே லிஃப்ட் சிக்கிக்கொண்டது. உடனடியாக லிஃப்ட்டின் கதவுகளை உடைத்த பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சரையும், உடனிருந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.

