தமிழ்நாடு
செந்தில்பாலாஜி வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்கு அமைச்சர் துரைமுருகனின் ரியாக்ஷன் என்ன?
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், செந்தில் பாலாஜி வழக்கு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “என் விஷயத்தை கேட்டிங்கள்ல... ஆளவிடுங்க” என பதிலளித்தார் அவர்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளரொருவர், “அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு அளித்திருக்கிறதே; அதை எப்படி பார்க்குறீங்க” என்பது போல ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் துரைமுருகன், “என் விஷயத்தை கேட்டிங்கள்ல... ஆளவிடுங்க” என பதிலளித்து விரைந்து நகர்ந்து சென்றார்.