டிசம்பருக்குள் மாநகராட்சி தேர்தல் வரும்: அமைச்சர் துரைமுருகன்

டிசம்பருக்குள் மாநகராட்சி தேர்தல் வரும்: அமைச்சர் துரைமுருகன்

டிசம்பருக்குள் மாநகராட்சி தேர்தல் வரும்: அமைச்சர் துரைமுருகன்
Published on
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி தேர்தல் வரும் என வேலூரில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
காட்பாடி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி சித்தூரில் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி.கதிர் ஆனந்த மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசு கொண்டு வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பஞ்சாயத்து தலைவர்களும், கவுன்சிலர்களுமே என்பதால் கட்சியினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com