சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் ஜோசப் தாக்கல் செய்த ரிட் மனுவின் தீர்ப்பின் வழிக்காட்டுதலின்படியே தண்ணீர் திறக்கப்பட்டது. 29ஆம் தேதி நீர்வள அலுவலர்களால் அணை திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கைக்காக கேரள அரசிற்கு அறிவிக்கப்பட்டது. கேரள அமைச்சர்கள் வந்தது தற்செயலானது. அணையில் நீர் இருப்பு 138 அடிதான் இருக்க வேண்டும். 29ம் தேதி 138.75 அடியாக நீர் இருந்ததால், தண்ணீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவானது. பூகம்பம் வர வாய்ப்பு இருப்பதாக கூறி 136 அடிக்கு முல்லைப் பெரியார் அணையின் நீர் இருப்பை குறைக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அணை பலமாகத்தான் உள்ளது. தமிழகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. பழைமை நிலைவாதிகளுக்கு இது தெரியாது.