கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்? - துரைமுருகன் விளக்கம்

கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்? - துரைமுருகன் விளக்கம்
கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்? - துரைமுருகன் விளக்கம்
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரி அளித்த அனுமதி அடிப்படையிலேயே நன்றி தெரிவித்து, தமிழக முதல்வர் கடிதம் எழுதியதாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் ஜோசப் தாக்கல் செய்த ரிட் மனுவின் தீர்ப்பின் வழிக்காட்டுதலின்படியே தண்ணீர் திறக்கப்பட்டது. 29ஆம் தேதி நீர்வள அலுவலர்களால் அணை திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கைக்காக கேரள அரசிற்கு அறிவிக்கப்பட்டது. கேரள அமைச்சர்கள் வந்தது தற்செயலானது. அணையில் நீர் இருப்பு 138 அடிதான் இருக்க வேண்டும். 29ம் தேதி 138.75 அடியாக நீர் இருந்ததால், தண்ணீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவானது. பூகம்பம் வர வாய்ப்பு இருப்பதாக கூறி 136 அடிக்கு முல்லைப் பெரியார் அணையின் நீர் இருப்பை குறைக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அணை பலமாகத்தான் உள்ளது. தமிழகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. பழைமை நிலைவாதிகளுக்கு இது தெரியாது.
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரி அளித்த அனுமதி அடிப்படையிலேயே நன்றி தெரிவித்து கேரள முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார். மரம் வெட்ட அனுமதி அளித்தது தொடர்பாக தனக்கு தெரியாது என கேரள அமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையில் நாங்கள் தலையிடுவது நாகரீகம் அல்ல. மழை வெள்ளத்தை காலை முதல் மாலை வரை நேரில் ஆய்வு மேற்கொள்ளும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. முதலமைச்சரான பிறகும் உழைப்பு உழைப்பு என உழைத்துக்கொண்டிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அதிமுக அரசியல் விளம்பரத்திற்காக பேசி வருகிறது'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com