“அனைத்து தொகுதிகளிலும் தடுப்பணை என்பது கருணாநிதி திட்டம்”- துரைமுருகன்

“அனைத்து தொகுதிகளிலும் தடுப்பணை என்பது கருணாநிதி திட்டம்”- துரைமுருகன்
“அனைத்து தொகுதிகளிலும் தடுப்பணை என்பது கருணாநிதி திட்டம்”- துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைமீது பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் தடுப்பணை கட்டுவதில் தமிழக அரசு முனைப்பு காட்டும் எனக் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மானியக் கோரிக்கை மீது பதிலுரை கொடுத்தார். அப்போது பேசிய அவர், ‘’இன்று பேரவையில் பேசுவதில் மனமகிழ்ச்சி அடைகிறேன். நான் கோபாலபுரத்து விசுவாசி. நான் இந்த துறை வேண்டும் என நீர்வளத்துறையை கேட்டுப் பெற்றேன். அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்டலாம். இது கருணாநிதி திட்டம். தடுப்பணை கட்டுவதில் தமிழக அரசு முனைப்பு காட்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் எடுக்கப்படும் மண், விவசாயிகள் மற்றும் செங்கல் சூளை வைத்திருக்கும் நபர்களுக்கு வழங்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 250 கோடியில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

8 மாவட்டங்களில் 10 இடங்களில் புதிய தடுப்பணை அமைக்கும் பணிகள் 70 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு மற்றும் விளவங்கோடு வட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்’’ என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com