மூடிய குவாரிகளைத் திறக்க சி.வி சண்முகம் கோரிக்கை

மூடிய குவாரிகளைத் திறக்க சி.வி சண்முகம் கோரிக்கை
மூடிய குவாரிகளைத் திறக்க சி.வி சண்முகம் கோரிக்கை

அமைச்சர் சி.வி சண்முகம், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்து மூடப்பட்ட குவாரிகளைத் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனைச் சந்தித்த, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில், சுற்றுச்சூழல் தடையின்மை சான்று இல்லாமல் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 2048 சுரங்கம் மற்றும் குவாரிகளால் கனிமம் சார்ந்த தொழில்கள் மட்டுமின்றி கட்டுமானத் தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பொதுமக்களின் நலன் கருதி மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com