கிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு

கிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு
கிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர்  உயிரிழப்பு

திருச்சி அருகே நீர் இல்லாத கிணற்றுக்குள் சரக்கு வாகனம் விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த எஸ்.எஸ்.புதூரில் சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கறி விருந்து நிகழ்ச்சிக்காக சென்ற அந்தச் சரக்கு வாகனத்தில் 22 பேர் பயணித்தனர். அப்போது வாகனத்தின் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் கடுப்பாட்டை இழந்த வாகனம் சாலை அருகே இருந்து நீரில்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவர, மீட்புக்குழுவினருடன் விரைந்து வந்து கிணற்றில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com