மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் 

மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் 

மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் 
Published on

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம், மேட்டுப்பட்டி, திருக்கட்டளை, முள்ளூர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி மற்றும் சுற்று வட்டாரங்களில் கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
நீலகிரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com