எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு சிறப்பு பார்கிங் ஏற்பாடு

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு சிறப்பு பார்கிங் ஏற்பாடு
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு சிறப்பு பார்கிங் ஏற்பாடு

சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு, வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை பார்கிங் செய்ய போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மக்கள் பயணித்து வரும் பேருந்துகள், வேன் மற்றும் கார்கள் ஆகியவை, கிண்டி எஸ்டேட் பகுதியில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு, தீவுத் திடல், சிவானந்தா சாலை, கடற்கரை சர்வீஸ் சாலையில் பார்க்கிங் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

மேற்கு மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வாகனங்கள், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம், ஐடிபிஎல் மைதானத்தில் நிறுத்தி வைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட இடங்களி‌ல் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த, ஓ.எம்.ஆர் சாலை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. தேனி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வாகனங்கள், ஒய்.எம்.சி.ஏ ராணுவ மைதானம், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com