48 ஆண்டுகால திருமண வாழ்க்கை.. அடுத்தடுத்து பிரிந்த இரு உயிர்கள்! இப்படியொரு கணவன்-மனைவியா!

48 ஆண்டுகால திருமண வாழ்க்கை.. அடுத்தடுத்து பிரிந்த இரு உயிர்கள்! இப்படியொரு கணவன்-மனைவியா!
48 ஆண்டுகால திருமண வாழ்க்கை.. அடுத்தடுத்து பிரிந்த இரு உயிர்கள்! இப்படியொரு கணவன்-மனைவியா!

மேட்டூர் அருகே கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவத்தால் அவர்கள் வாழ்ந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தேங்கல்வாரை பகுதியைச் சேர்ந்தவர்கள் சின்னையன் (80), ஜெயம்மாள் (72) தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில், மகன் மேட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரின் மகளை வெளியூரில் திருமணம் செய்து கொடுததால் சின்னையனும், அவரது மனைவியும் தனியாக வசித்துவந்தனர்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 48 ஆண்டுகள் ஆன நிலையில், ஒரே நாளில் இருவரும் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை சின்னையன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையறிந்த அவரது மனைவி ஜெயம்மாளும் அதிர்ச்சி தாளாமல் உயிர் இழந்துள்ளார் இவர்களின் இழப்பு வெளியில் தெரியாத நிலையில் பால்காரர் வந்து பார்த்த போது இருவரும் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்துக்கு தகவல் தெரிவித்தனர்

அதன் பிறகு அனைவரும் வந்து பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்ற வாசலில் காத்திருக்கும் தம்பதிகளுக்கு மத்தியில் 48 ஆண்டுகால மணவாழ்க்கையில் ஒற்றைக்கருதோடு வாழ்ந்து இன்று ஒரே நேரத்தில் உயிர் பிரிந்த சம்பவம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com