பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கைது

பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கைது
பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கைது

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் பேராசிரியர் ஜெயரான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி சித்ராவையும் காவல்துறை கைது செய்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் பேராசிரியர் ஜெயராமனை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். ஜெயராமன், அவரது மனைவி சித்ரா ஆகியோரை நன்னிலத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். ஜெயராமனுடன் இணைந்து போராட்டம் நடத்தி வரும் இளம்பரிதி, அருண்நேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மக்களை திரட்டி போராட முயன்றதாக ஜெயராமன் மீது குற்றம் சுமத்தப்ப‌ட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்த 100க்கும் அதிகமானோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே ஓ.என்.ஜி.சியின் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயராமன் உள்ளிட்டோர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com