அடுத்த 3 மணி நேரம்.. 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெய்யிலின் கடுமையை தணிக்கும் பொருட்டு தமிழகத்தில் ஆங்காங்கே மிதமானது முதல் பலத்த மழையானது பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் நாம் மழையை எதிர்பார்க்கலாம்
மழை
மழைPT

தமிழகத்தில் சென்னை உட்பட் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கோயமுத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கக்கூடும் என்று வானிலை மைய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை அறிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com