"ஜன.29, 30ல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்" - வானிலை ஆய்வு மையம்

"ஜன.29, 30ல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்" - வானிலை ஆய்வு மையம்
"ஜன.29, 30ல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்" - வானிலை ஆய்வு மையம்

கிழக்கு திசை காற்றின் வேக வேறுபாடு காரணமாக, கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

29ஆம் தேதியன்று கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும் 30-ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com