6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழையும், 20 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, அரியலூர், திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் இன்று கனம்ழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுகுறித்து முதல்வர் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com