காற்றழுத்த தாழ்வுப்பகுதி - மீனவர்களுக்கு எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வுப்பகுதி - மீனவர்களுக்கு எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வுப்பகுதி - மீனவர்களுக்கு எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் நவம்பர் 9 , 10 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து மழைபெய்து வருகிறது. 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்திருக்கிறது. மேலும், நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் நவம்பர் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - ஆந்திர கடலோரப் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறது. மேலும், வங்கக்கடலில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ஆம் தேதிக்குள் கரை திரும்பவும் அறிவுறுத்தி இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானபின், வட கடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com