“தொற்று தீயா பரவுது; இதையெல்லாம் நிச்சயம் கடைபிடிங்க”-ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்

“தொற்று தீயா பரவுது; இதையெல்லாம் நிச்சயம் கடைபிடிங்க”-ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்
“தொற்று தீயா பரவுது; இதையெல்லாம் நிச்சயம் கடைபிடிங்க”-ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

அதில் சில முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்... 

>இந்த அலையில் இறப்பை பெருமளவில் குறைக்க வேண்டும்.

>கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

>யாரை பரிசோதிக்க வேண்டும்,  யாரை பரிசோதிக்க வேண்டாம் என ஐசிஎம்ஆர் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். (அறிகுறி இல்லையென்றால் பரிசோதிக்க வேண்டாம்)

>தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் தேவை. 

>கோவிட் பராமரிப்பு மையங்கள் முழுவீச்சில் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும்நிலையில், இந்த வலியுறுத்தல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com