"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ராமரே விரும்பி இருக்க மாட்டார்" - துரை வைகோ விமர்சனம்!

"வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளது. தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே தொண்டர்கள் விரும்புகிறார்கள்" என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோPT WEB

சென்னை அடுத்த போரூரில் மதிமுக நிர்வாகி ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தைக்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு மதிமுகவில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டது. இந்த முறை 2 தொகுதிகள் கேட்க உள்ளோம்.

‘I.N.D.I.A. கூட்டணி’

ஈரோடு, விருதுநகர், காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்களில் மதிமுகவின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. இங்கு மதிமுக போட்டியிட்டாலும் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டாலும் வெற்றிபெற மதிமுகவின் பங்கு பெரிதாக இருக்கும். எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. ஆனால் கட்சி தொண்டர்கள், தலைவர் விரும்பினால் போட்டியிடுவேன். தமிழ்நாட்டில் I.N.D.I.A. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

அயோத்தி ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவில்

‘யார் சங்கி?’

மதங்களைக் கடந்து அரசியலுக்கு அப்பாற்பட்டவர் ரஜினிகாந்த் ஆனால் அவர் சங்கி குறித்துப் பேசியதற்கு எனக்கு மாறுபாடு உள்ளது. அரசியலையும், மதத்தையும் கலப்பவர் சங்கி என்பேன். கோட்சேவை சங்கி என்பேன், அவரை நல்லவன் என்போரையும் சங்கி என்பேன். மதங்களை வைத்து வெறுப்பு அரசியல் செய்வோரை சங்கி என்பேன். மதத்தை வாக்கு வங்கியாக மாற்றுபவர்கள்தான் சங்கிகள்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ
பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குப்பதிவு பெட்டிகள்... அசாம் 'சம்பவம்' - நடந்தது என்ன?

‘அயோத்தி ராமர் கோயில் - பாஜக அரசியல்’

கடவுள் ராமரின் விருப்பத்திற்கு எதிராகக் கட்டப்பட்ட கோவில்தான் அயோத்தி ராமர் கோவில். இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் ராமர் இருப்பார். ஆனால் பல்லாயிரக்கணக்கான நபர்களைக் காவு வாங்கிய அயோத்தி கோவிலில் ராமர் இருக்கமாட்டார். அயோத்தி ராமர் கோவிலை வைத்துத் தேர்தலில் வெற்றி பெறலாம் என பாஜக திட்டமிட்டு உள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கடந்த தேர்தலில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம், இந்தியாவில் தலைவிரித்து ஆடுகிறது. மதத்தையும், அரசியலையும் ஒன்றிணைத்து நாட்டை சீரழிக்கும் நிகழ்வாகத்தான் அயோத்தி ராமர் கோவிலை நான் பார்க்கிறேன்.

‘ஆளுநரின் அரசியல்...’

தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதி, திட்டங்களைப் பெற்றுத் தருவதற்கு ஆளுநர் வாய்த் திறப்பதில்லை. ஆனால் தமிழ்நாடு அரசிற்கு திட்டங்களைச் செயல்படுத்தக் குடைச்சல் கொடுத்து வருகிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர்தான் முழுக்க முழுக்க சங்கியாக மாறியுள்ளார். தேசப்பிதா காந்தியைக் கொச்சைப்படுத்திப் பேசினார்.

‘விஜய் அரசியல்...’

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து, அவரது கொள்கைகளைச் சொல்லட்டும். அதனை ஏற்று மக்கள் ஆதரிப்பார்கள். வரும் காலங்களில் நடிகர் விஜய் மட்டும் அல்ல மக்களுக்குச் சேவை செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் அதன் பக்கம் மதிமுக நிற்கும்" என்றார்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ
பிப்.18ல் திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com