காவி நிறத்தில் மாறும் போர்வெல் தண்ணீர்.. ஆயில் மிதப்பதால் மயிலாடுதுறை மக்கள் அச்சம்!

காவி நிறத்தில் மாறும் போர்வெல் தண்ணீர்.. ஆயில் மிதப்பதால் மயிலாடுதுறை மக்கள் அச்சம்!
காவி நிறத்தில் மாறும் போர்வெல் தண்ணீர்.. ஆயில் மிதப்பதால் மயிலாடுதுறை மக்கள் அச்சம்!

குத்தாலத்தில் போர்வெல் தண்ணீரில் ஓஎன்ஜிசியின் ஆயில் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள ஓஎன்ஜிசியின் எண்ணெய் எரிவாயு சேமிப்பு நிலையம் அருகே விழாவடி காலனியில் வசித்து வருபவர் புகழேந்தி. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு 60 அடியில் போர்வெல் வாட்டர் அமைத்து குடிதண்ணீராக பயன்படுத்தி வந்தார். இந்த தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வைத்த 5 மணி நேரத்தில் காவி நிறத்தில் மாறியதால் வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் ஒவ்வாமை அலர்ஜி உள்ளிட்ட வியாதிகள் ஏற்பட்டது.

இது குறித்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஊராட்சியால் வழங்கப்படும் குடிதண்ணீரை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் தாங்கள் முன்னதாக பயன்படுத்திய போர்வெல் வாட்டரானது காவி நிறமாக மாறி தண்ணீரின் மேலே ஆயில் மிதப்பதாகவும் அருகாமையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கலந்து வருவதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

தங்கள் பகுதியில் போர்வெல் வாட்டர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்தினர் நிலத்தடி நீரில் ஓஎன்ஜிசி எண்ணெய் கலந்துள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறுகள் அமைத்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து போர்வெல் வாட்டர் பயன்படுத்த முடியாத நிலைக்கு காவி நிறத்தில் உள்ளதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com