மயிலாடுதுறை: கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு கண் அகற்றப்பட்ட பெண் உயிரிழப்பு

மயிலாடுதுறை: கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு கண் அகற்றப்பட்ட பெண் உயிரிழப்பு
மயிலாடுதுறை: கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு கண் அகற்றப்பட்ட பெண் உயிரிழப்பு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கண்கள் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (45). இவர், சீர்காழி கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 12-ஆம் தேதி மீனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இந்நிலையில், குணமடைந்து வீடு திரும்பிய 6 நாட்களுக்கு பின்பு மீனாவுக்கு இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் மீனாவுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கடந்த மே 14-ஆம் தேதி அவரது இடது கண் அகற்றப்பட்டு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த மீனாவிற்கு ஷீராய்டு ஊசி செலுத்தப்பட்டதால் ஒவ்வாமையால் இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வை இல்லாமல் போனதாக வேதனை தெரிவித்த உறவினர்கள், மேலும் தொடர் சிகிச்சை அளிக்க பணமில்லாமல் தவிப்பதாகவும் அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார். மீனாவின் உடலை உறவினர்கள் மயிலாடுதுறைக்கு எடுத்துவந்து இன்று காலை தகனம் செய்தனர்.

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com