கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அங்கேயே காட்சிப்படுத்தப்படும்: அமைச்சர் சாமிநாதன்

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அங்கேயே காட்சிப்படுத்தப்படும்: அமைச்சர் சாமிநாதன்
கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அங்கேயே காட்சிப்படுத்தப்படும்: அமைச்சர் சாமிநாதன்
கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மக்கள் பார்வைக்காக அதன் அருகிலே கண்காட்சிக்கு வைக்கப்படும் என ஈரோட்டில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள நொய்யல் நதி கரையோரம் அமைந்துள்ள கொடுமணலில் நடைபெற்று முடிந்த அகழ்வாராய்ச்சி பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். இந்த அகழ்வாராய்ச்சியில் 2500ஆண்டுகளுக்கும் முந்தைய கிணறு, உருக்காலை, வர்த்தகம் செய்த இடங்கள் மற்றும் சமாதி ஆகிய இடங்களை பார்வையிட்ட அமைச்சர், பின்னர் அங்கு கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது கொடுமணலில் அகழாய்விற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும்,அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அகழாய்வில் கிடைக்கின்ற பொருட்கள் மக்கள் அதிகம் கூடுகின்ற இடத்தில் கண்காட்சி அமைக்கப்படும் என்றார். நடிகர் வடிவேலு முதல்வரை சந்தித்த பிறகு பட வாய்ப்புகள் தொடங்கியிருக்கிறது என தெரிவித்துள்ளதில் திமுகவின் ஆதிக்கம் சினிமா துறையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு சினிமா துறையில் அரசியல் தலையீடு இல்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com