தமிழ்நாடு
நாளை முதல் மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி
நாளை முதல் மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த மெரினா கடற்கரை நாளை திறக்கப்படவுள்ளதையடுத்து முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டன. மேலும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், உத்தரவை மீறி வருபவர்களுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமுடக்க தளர்வில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் காரணமாக மாநகராட்சி ஊழியர்கள் கடற்கரை மணற்பரப்பு, சர்வீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.